உலக உயிரினங்களில் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உயிரினங்களில் ஆறு அறிவு படைத்த மனிதன் மட்டும் சிந்திக்கிறான், ஆராய்ச்சி செய்கிறான். தன் உணர்வுகளைப் பேச்சின் மூலம் தெரிவித்துக் கொள்கிறான். தனக்குத் தேவையான வசதி வாய்ப்புகளைத் தேடி அலைகிறான். நல்லது கெட்டது என்பதைப் பகுத்தறிந்து கொள்ளும் தன்மை மனித உயிரினங்களுக்கு மட்டுமே உரியது.
அறிவியல் சார்ந்த இயற்கையோடு ஒன்றிய விஞ்ஞானத்தை ஆராய்ந்து வெற்றியடையும் திறமை மனித இனத்திற்கு மட்டும் இயற்கை அளிக்கிறது. ஆயக் கலைகள் 64 வகையை கண்டுபிடித்து அனுபவித்து வரும் மனிதன் பல சிந்தனை சிற்பிகள், ஞானிகள், சித்தர்கள், மகான்கள், பெரியவர்கள், நமக்கு விட்டுச் சென்ற பொக்கிழங்களை அறிந்து அதன் பயனை நாமும் நம்மை சார்ந்தவர்களும் பெற வேண்டும். இந்த உலகில் பிறந்த அத்தனை மனிதர்களும் எந்த வகையிலாவது தனித்தன்மைகள், திறமைகள், சிறப்புகள் பெற்று இல்லாதவர்கள் இல்லை. ஆனால் தன்னிடம் இருக்கும் திறமை தெரியாமல் வெளிப்படுத்தாமல் இந்த மண்ணிற்கும் உலகிற்கும் நாட்டிற்கும், வீட்டிற்கும், பாரமாக வாழ்ந்து சென்றவர்களும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் தான் அதிகம். ஆகவே இயற்கை நமக்களித்த வசதிகள், வாய்ப்புகளை நாம் முழுமையாக முறையாக பயன்படுத்த பிறவிப்பயன் அடைவோம்.
ஆயக்கலைகள் 64 கலைகளில் சிறப்புடையதும் அவசியமான, முதன்மையானதும், தொன்மையானதும், வளமிக்க வாழ்க்கைக்கு தேவையானதும வாஸ்து கலை 13 -வது கலையாக நமது முன்னோர்கள் நமக்கு அளித்து சென்றுள்ளார்கள். இந்த வாஸ்து கலையை நாம் முறையாகத் தெரிந்து கொண்டு, விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து நடைமுறைக்கு உகந்த இந்த கலையை மூட நம்பிக்கை என்ற பெயரில் வீணாக்காமல் அறிவு பூர்வமாக அறிந்து செயல்படுத்த வேண்டும். இதன் சாதக பாதகங்களை ஒளிவு மறைவு இல்லாமல் கற்று நமக்கும், சமுதாயத்திற்கும் பெரிதும் உதவக்கூடிய சமுதாய பணியாக மேற்கொள்ள வேண்டும். வாஸ்து குறைகள் மூலம் பல இன்னல்களில், இழப்புகளில், துக்கத்தில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு வாஸ்துவின் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், இந்த மூன்றும் முக்கியமானதாகும். உறைவிடமாகிய வீடு வாஸ்து சாஸ்திரத்திற்கு புறம்பாக அமைத்துக் கொள்பவர்கள் வாழ்க்கையில் பலவிதத் தொல்லைகள், கஷ்டங்கள், துரதிர்ஷ்டங்கள், அவலங்கள், சண்டை சச்சரவில், வம்பு வழக்குகள், விபத்துகள், அநியாய சாவுகள், தற்கொலைகள், குடும்பத்தில் சண்டைகள், உடல் நல குறைவுகள், மன நல பாதுகாப்புகள், முன்னேற்ற தடைகள், குழந்தை பாக்கியம் இல்லாமை, ஊனமுற்ற குழந்தைகள் பிறத்தல், திடீர் நஷ்டங்கள், பண விரயங்கள், கணவன் மனைவி சண்டைகள், குழப்பங்கள், பொருளாதார நேர்ருகடி, தொழில் நஷ்டங்கள், மற்றும் தீய ஆவிகள் (பேய், பூதம்) பிரவேசம், நடமாட்டம், செய்வினைகளால் பாதிப்பு, தீயினால் பாதிப்பு போன்ற கொடுமையான பலன்கள் ஏற்பட்டு அதில் இருந்து மீள முடியாமல் பலர் வாஸ்து குறையினால்தான் கஷ்டங்கள் ஏற்படுகிறது என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள் மூட நம்பிக்கை என்று சொல்வார்கள். வாஸ்து என்பது ஏமாற்றுக்காரர்களின் பொழுது போக்கு என்றும் சொல்லித் திரிவார்கள், இதற்கு காரணம் அரைகுறை வாஸ்து ஆலோசகர்களே. இவர்களின் இந்த பிரச்சாரத்திற்குக் காரணம், அரைகுறை வாஸ்து ஆலோசகர்கள் அழகான கவர்ச்சியான பேச்சற்றளினாலும், விளம்பரங்களினாலும், ஆலோசனை என்ற பெயரில் பெரும் தொகையை ஆலோசனைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு முறையாக வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்காத காரணத்தினால் வாஸ்து மூலம் பலன் பெறாத நிலை ஏற்படும்போது, வாச்துவிற்கு எதிராக பேசுபவர்களுக்குத் தீனியாக அமைந்துவிடுகிறது. இதற்கு முழு காரணம் வாஸ்து சாஸ்திரத்தை சரியாக அறிந்த வல்லுனர்கள் மிக குறைவாக இருப்பதே காரணம். நமது நாட்டில் இரகசியம் என்ற பெயரில் அவரவர்களுக்கு தெரிந்ததை வெளிப்படையாக விவாதிக்காமல் யானையை தொட்டுப் பார்த்த குருடர்கள் போல் தனக்கு தெரிந்தவையே சரி என்றும், மற்றவர்கள் கூறுவது தவறு என்றும், ஆராய்ச்சி மனப்பன்மையில்லாமல் வாஸ்து கலை தெரிந்தவர்களுடன் விவாதித்து வெளிப்படையாக வெளிக்கொண்டு வராத காரணத்தாலும், பல நூல்கள் புரியாத மொழியில் இருப்பதாலும் அறிய பொக்கிஷமான வாஸ்து கலை, சாதாரண மனிதன் அறிந்துகொள்ளும் நிலை ஏற்படவில்லை.
தற்சமயம் வாஸ்து சாஸ்திரத்தின் மகிமையை மக்கள் உணரத் துவங்கிவிட்டார்கள், வாஸ்துவின் பயனால் வளமான வாழ்க்கையும், செல்வ செழிப்பும் அடையலாம் என மக்கள் சிறிது சிறிதாகப் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டார்கள். மனிதத்துவமும் இயற்கை சக்தியும் இணையும் இடமாக வாஸ்து இருக்கும் என்ற நம்பிக்கை உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.